இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு சமத்துவப்புரத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன், உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஷ்ரோதே உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய சமத்துவப்புரத்தின் வசதிகளை பார்வையிட்டனர். மேலும் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், வள்ளிமாடன் வலசை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவப்புரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்