இராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 25 ஊரணிகளை புனரமைத்து மேம்படுத்தும் திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கே. கார்மேகம் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சியில் உள்ள ஊரணிகள் புனரமைக்கப்பட்டு மழைநீர் சேமிப்பு மேம்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராமநாதபுரம்

More Stories
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக்கோன்வலசை அரியமான் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட நகரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோமுட்டியேந்தல் கண்மாயின் சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கிராம மக்கள் மற்றும் கண்மாய் சங்க நிர்வாகிகளின் முன்னிலையில், துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி அடிவாரம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 230 மாணவர்களுக்கு நோட்புக்குகள் வழங்கப்பட்டன.