காபூல்: ஆப்கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் அடுத்த கட்டமாக, ‘கணவன் – மனைவி பிரிவதற்கான கொள்கைகள்’ என்ற தலைப்பில் தலிபான்கள் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
அதற்கு ஆப்கன் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். அந்த சட்டத்திருத்தத்தில், ‘‘ஆப்கானிஸ்தானில் கன்னிப் பெண்கள் மவுனம், திருமணத்துக்கு சம்மதமாகக் கருதப்படும். பெண் குழந்தைகளின் திருமண விஷயத்தில், பருவம் அடைந்த பிறகு, அதை ரத்து செய்வதற்கு தலிபான் நீதிமன்றங்கள்தான் முடிவெடுக்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

More Stories
300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகள்
பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதை வழங்கி கவுரவித்த இளவரசி விக்டோரியா
ஈரானின் ட்ரோன் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக் அணு மின் நிலையத்தில் தீ