காபூல்: ஆப்கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதன் அடுத்த கட்டமாக, ‘கணவன் – மனைவி பிரிவதற்கான கொள்கைகள்’ என்ற தலைப்பில் தலிபான்கள் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
அதற்கு ஆப்கன் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்ஸடா கையெழுத்திட்டுள்ளார். அந்த சட்டத்திருத்தத்தில், ‘‘ஆப்கானிஸ்தானில் கன்னிப் பெண்கள் மவுனம், திருமணத்துக்கு சம்மதமாகக் கருதப்படும். பெண் குழந்தைகளின் திருமண விஷயத்தில், பருவம் அடைந்த பிறகு, அதை ரத்து செய்வதற்கு தலிபான் நீதிமன்றங்கள்தான் முடிவெடுக்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

More Stories
மேற்காசிய பதற்றம் | ஹவுதி தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: சவூதி அரேபியா எச்சரிக்கை
ஹார்முஸ் பாதுகாப்புச் செலவை பிற நாடுகள் அமெரிக்காவுக்கு தர வேண்டும்: ட்ரம்ப் கெடுபிடி
உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்: ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு