சென்னை: சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்லும் எத்தியாட் ஏர்வேஸ் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்படத் தயாரான போது விமானத்தில் 228 பயணிகள், 10 விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்து ஓடுபாதையில் நிறுத்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விமானப் பொறியாளர்கள் குழுவினர், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்த போது விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

More Stories
கம்யூனிஸ்ட் உறுப்பினர் விவரம் சேகரிக்க கூறிய குஜிலியம்பாறை வட்டாட்சியர் சென்னைக்கு பணியிட மாற்றம்
ஒப்பந்ததாரரின் ஆடியோ வெளியான நிலையில் வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து
டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு புகார்: மேட்டூரில் 3 தனியார் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை