தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தலுக்காக மக்களிடம் மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் செங்கோட்டையன். அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்த இவர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதனையடுத்து வயசில சின்னத்தில் ஓட்டு போடுமாறு மக்களிடம் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து செங்கோட்டையன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
செங்கோட்டையன் விமர்சனம்
அதிமுகவில் மூத்த நிர்வாகியாக வலம் வந்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சம்பந்தமாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத கதையாக கட்சியில் இருந்து ஒரு நிமிடத்தில் தன்னை தூக்கி எறிந்து விட்டதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த சம்பவம்
இந்நிலையில் தற்போதைய பரப்புரையில் ஜெயலலிதா மறைவுக்கு பின் நான் முதலமைச்சராகி இருக்க வேண்டும். ஆனால் ஒரே இரவில் எல்லாம் மாறி விட்டது என தெரிவித்துள்ளார். அதாவது ஜெயலலிதா இறப்புக்கு பின்பாக ராத்திரி வரைக்கும் நான் தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டியது இருந்தது. ஆனால் காலையில் எல்லாமே மாறியது. ஏனென்றால் அந்த ஆள் கையில் பெட்டி இருந்தது என எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டார்.
தொடர்ந்து சசிகலா காலையில் வந்து என்னிடம் கேட்டாங்க. நானும் கட்சி உடையாமல் இருந்தால் போதும். யார் முதலமைச்சராக இருந்தால் என்ன என்றார். ஆனால் இரவில் நான்தான் முதல்வர் என்று சசிகலா என்னிடம் சொல்லி இருந்தார். திடீரென மலைப்பாம்பு மாதிரி என் காலுக்கு அடியில் ஊர்ந்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. காலைப் பிடித்து முதல்வர் பதவிக்கு வந்துவிட்டு பிறகு சசிகலாவையை தூக்கி எறிந்தது விட்டார் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் செங்கோட்டையன்.
சசிகலாவின் குற்றச்சாட்டுகள்
இதனிடையில் அஇபுதமமுக கட்சியை துவங்கி தேர்தலில் களமிறங்கியுள்ள சசிகலாவும், இபிஎஸ் மீது பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். என் காலில் விழுந்து பதவியை வாங்கி விட்டு, காலை வாரி விட்டார். நாய் கூட நன்றியுடன் செயல்படும். நான் சிறையில் இருந்த சமயத்தில் திட்டமிட்டு கொரோனாவை என்மீது பரப்பினார்கள் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் சசிகலா. அதே போல் ஓபிஎஸ்ஸும் அரசியலில் துரோகி என்றால் அது இபிஎஸ் தான் எனவும் பேசி வருகிறார்.
காலில் விழுந்து கெஞ்சினேன்.. நாயாக கூட பார்க்கவில்லை.. தவெக மீது கண்ணீருடன் அஜிதா ஆக்னல் பகீர் குற்றச்சாட்டு
பிரேமலதா விஜயகாந்தை ஏமாற்றியவர்
இந்நிலையில் தற்போது செங்கோட்டையன் பரப்புரையில் பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக தன்னை துரோகி என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி குறித்து சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என பாஜகவிடம் இபிஎஸ் பேசியதாக தெரிவித்து பரபரப்பினை கிளப்பினார். அதோடு பிரேமலதா விஜயகாந்திற்கு ராஜ்ய சபா சீட் தருவதாக சொல்லி ஏமாற்றினார்.
இரட்டை இலை சின்னம்
சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் என அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கி துரோகம் செய்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் செங்கோட்டையன். இதனிடையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு விடாதீர்கள். விசிலில் உங்கள் வாக்கை செலுத்துங்கள் என மக்களிடம் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

More Stories
தைலாபுரத்தில் ஐயாவின் ஜனநாயகக் கடமை! வீட்டிலிருந்தே தபால் வாக்கைப் பதிவு செய்த ராமதாஸ்!
விசில் அடிக்கலாம்… நாட்டை கொடுக்க முடியாது– விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்!
ரூ.8,000 மாதிரி கூப்பன் விநியோகத்தால் பரபரப்பு – சிவகங்கையில் நடந்தது என்ன?