புதுடெல்லி: டெல்லியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படிக்கட்டு நகன்று மோதியதில் ஏர் இந்தியாவின் 3 விமானங்கள் சேதம் அடைந்தன.
டெல்லியில் நேற்று மாலை 4.40 மணிக்கு பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், அங்கு மணிக்கு 101 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சக்கரங்களுடன் கூடிய விமான படிக்கட்டு வேகமாக நகர்ந்து அருகில் நின்றிருந்த ஏர் இந்தியா விமானங்களை நோக்கிச் சென்றது. அதை தடுத்து நிறுத்த விமான நிலைய பணியாளர்கள் ஓடினர்.
ஆனால், அதற்குள் படிக்கட்டு விமானங்கள் மீது மோதியது. இதில் 3 விமானங்கள் சேதம் அடைந்தன. 2 விமானங்களில் லேசான சேதம் ஏற்பட்டதால், அது உடனடியாக சரி செய்யப்பட்டு பயணத்துக்கு தயாரானது.

More Stories
’I-N-D-I-A’ கூட்டணி | கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
ஏழை குடும்பங்களுக்கான மானிய விலை சிலிண்டர்கள்.. எண்ணிக்கையை 4ஆக குறைத்த மத்திய அரசு!
அதானி குழுமத்துக்கு அடித்த ஜாக்பாட்.. அர்ஜென்டினாவுடன் ஒப்பந்தம்.. எதில் தெரியுமா?