August 5, 2026

திமுக முன்னாள் எம்எல்ஏ மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லின் பெயர் பொறித்த கல்​வெட்டை மறைத்து மூடப்​பட்​டிருந்த வலையை சேதப்​படுத்​தி​யாக பதிவு செய்​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக்​கோரி திமுக முன்​னாள் எம்​எல்ஏ தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உயர்நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை கிழக்கு கடற்​கரை சாலை நெம்​மேலி​யில் கடல்​நீரை குடிநீ​ராக்​கும் திட்​டத்​தின் இரண்​டாவது பெரிய அலகை கடந்த ஜூலை 6-ம் தேதி தமிழக முதல்​வர் விஜய் நேரில் சென்று பார்​வை​யிட்​டார்.

அப்​போது முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லின் பெயர் பொறித்த கல்​வெட்டை மறைத்து மூடப்​பட்​டிருந்த வலையை சேதப்​படுத்​தி​ய​தாக திருப்​போரூர் தொகுதி திமுக முன்​னாள் எம்​எல்ஏ இதய​வர்​மன் உள்​ளிட்ட இரு​வர் மீது மாமல்​லபுரம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர்.

இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி இதய​வர்​மன் தாக்​கல் செய்​திருந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது இந்த சம்​பவம் தொடர்​பான வீடியோ ஆதா​ரங்​களை போலீ​ஸார் தாக்​கல் செய்​தனர்.

அப்​போது அந்த வீடியோவை பார்த்த நீதிப​தி, முன்​னாள் எம்​எல்​ஏ-​வாக​வும், தற்​போதைய ஊராட்சி ஒன்​றிய தலை​வ​ராக​வும் உள்ள மனு​தா​ரர் இது​போன்ற செயல்​களில் ஈடு​படக்​கூ​டாது எனக்​கூறி இதய​வர்​மன் தாக்​கல் செய்​திருந்த மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார். மேலும் இந்த வழக்​கில் 12 வாரங்​களில் இறுதி அறிக்கை தாக்​கல் செய்​ய​வும் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

Spread the love