திருப்பூரில் கடந்த ஜனவரி மாதம் விவசாய சங்கத்திற்கு website ஆரம்பிப்பதற்காகமுன் தொகையாக பணம் கொடுத்துள்ளார்,ஆனால் சங்கத்திற்கு ஏற்ற வடிவமைப்பைத் செய்துத் தராமல் காலம் தாழ்த்தியுள்ளார் .வேலையைப்பற்றி கேட்கும்
போதெல்லாம் முழுத் தொகையையும் கொடுத்தால் தான் செய்துத் தருவதாகநிறுவனத்தினர் ஏமாற்றி வந்துள்ளார் .ஒரு கட்டத்தில் அவரே வடக்கு காவல் நிலையத்தில் பணம் தர மறுக்கிறார்கள் எனப் பொய்ப்புகார் மனுவினை சங்கத்தின் மீது புகார் மனுவினைக் கொடுத்துள்ளார் திருப்பூர் காவல் ஆணையாளரிடம் நிறுவனத் தலைவர் .விவசாயமணி நேரில் சென்று விளக்கமளித்து , உடனடியாக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது .இதனை ஏற்றுக்கொண்ட காவல் ஆணையாளர் உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டும் , நேற்று ஆணை அனுப்பியும் எதிர்தரப்பு சேமலையப்பன் என்பவர் ஆஜராகவில்லை .அவர்மீது சட்டப்படி உரிய நடவடிக்கையெடுத்து முடக்கி வைக்கப்பட்டுள்ள இணையதளத்தை மீட்டுத் தருமாறும் , நிலுவைத் தொகையை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டியும் , அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நற்பெயரை கெடுக்கும் எண்ணத்தில் பொய்ப்புகாரளித்த சேமலையப்பனை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் கிரைம் மோசடி பிரிவில் தலைமை நிர்வாகிகள் 50 கும் மேற்பட்டோர் தலைமையில் இன்று நேரடியாக காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது .

More Stories
நேபாள வெள்ளத்தில் சிக்கிய ராசிபுரம் தொழிலதிபர் குடும்பத்தினர்…தொடர்பு துண்டிக்கப்பட்டதால் குடும்பத்தினர் கவலை,,,
விவசாயிகள் கோரிக்கை நிறைவேறியது!
பழனி