சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நாளை (மே 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி புஷ்பப் பல்லக்கு சேவை நேற்று இரவு நடைபெற்றது.
பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய எம்பெருமானை திரளான பக்தர்கள் தரிசித்து பரவசமடைந்தனர். தொடர்ந்து இன்று (30-ம் தேதி) அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் விழா நடக்கிறது.
மே 1-ம் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7-ம் தேதி நடைபெறுகிறது. 8-ம் தேதி பல்லக்கில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
9-ம் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு, காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்க நிகழ்வு நடைபெறும். 10-ம் தேதி இரவு 10 மணிக்கு சிறிய திருத்தேர் நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.

More Stories
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
அதிமுக கப்பலை தளபதி மூழ்க விடமாட்டார்! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை..” – CPI வீரபாண்டியன்