விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் இரவோடு இரவாக மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் முக்கிய நபரை கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்தது.
விளாத்திகுளம் மாணவி வழக்கு – தர்ம முனீஸ்வரன் கைது
வேடநத்தம் பகுதியில் உள்ள ஒரு காற்றாலை அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வீடியோ காட்சிகள் மூலம் ஒருவர் கண்டறியப்பட்டார். உடனே தனிப்படை போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று (மார்ச் 20 ஆம் தேதி) மாணவியின் உடலானது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நிறைவு பெற்றது.
14 நாட்கள் நீதிமன்றக் காவல்
நேற்று (மார்ச் 20 ஆம் தேதி) மாலை தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனை (36) போலீசார் ஆஜர்படுத்தினர். தர்ம முனீஸ்வரனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து, போலீசார் விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.
இரவோடு இரவாக மாற்றம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த தர்ம முனீஸ்வரன், பாளையங்கோட்டை மத்திய சிறை சாலைக்கு கொண்டு வரப்படுவதை அறிந்த சக கைதிகள், தர்ம முனீஸ்வரன் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தர்ம முனீஸ்வரன் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தும் சூழல் உருவானதால், இரவோடு இரவாக அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஞானசேகரன் குற்றவாளிதான்…அதிரடி தீர்ப்பு…!
தர்ம முனீஸ்வரன் எங்கே என கேள்வி
இரவு நேரத்தில் நடந்த இந்த திடீர் மாற்றத்தால் பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலையில் இரவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது தர்ம முனீஸ்வரன் மதுரை சிறையில் தான் உள்ளாரா? இல்லை வேறு எங்கேயாவது வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

More Stories
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி
நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒன்றிய,நகர மற்றும் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டமானது மக்கள் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் இராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை: