மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். தேர்தல் கமிஷன் நியமித்துள்ள ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அன்கித்குமார் அகர்வால், செலவின பார்வையாளர் பிரதீப், நாமக்கல், பரமத்தி வேலூர் தொகுதி பொதுப்பார்வையாளர் மனோஜ் புஷப், நாமக்கல் தொகுதி செலவின பார்வையாளர் முகேஷ் கட்டாரியா, ப.வேலூர், திருச்செங்கோடு தொகுதி செலவின பார்வையாளர் ரோஹித்குமார், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதி பொதுப்பார்வையாளர் லாலாசாஹிப் யாதவ், குமாரபாளையம் தொகுதி செலவின பார்வையாளர் புத்தி பிரகாகாஷ் மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் போலீஸ் பார்வையாளர் மயூர் குலாப்ராவ் பாட்டில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் முன்னிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது