March 20, 2026

நாமக்கல்:தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாமக்கல்லில் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ் என்பவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உரிமத்துடன் கூடிய கை துப்பாக்கி இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு,  மாதிரி கை துப்பாக்கியை கையில்  ஏந்தியவாறு நாமக்கல்லில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

oplus_0

வருகின்ற ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனர் தலைவர் காந்தியவாதி ரமேஷ் என்பவர் 13 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை (20.03.2026) வெளியிட்டார்.

Spread the love