பழனி மார்ச் 20
பழனி முருகன் கோவிலின் உபகோவில் பெரியநாயகி அம்மன் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி முத்துக்குமார சுவாமி சன்னதியில் நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் பெரியநாயகி, சிவன், நடராஜர், சிவகாமி அம்மாள், சோமாஸ்கந்தர், முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றது. அதன் பின்பு பஞ்சாங்க புத்தகங்களுக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. பின்பு கோயில் குருக்கள் செல்வ சுப்பிரமணியம் பஞ்சாங்கம் வாசித்தார். இதில் சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர்கள் சுப்புராஜ், கீதாசுப்புராஜ், கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, மணியம் ரஞ்சித், கட்டிட வல்லுநர் நேரு, மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்