கோட்டாட்சியர் அரசு மரியாதை செய்தார்
பழனி ஜூன் 7
பழனி அருகே உள்ளது சாமிநாதபுரம் இந்த ஊரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் இவரது மகன் ஜெகன் வயது 21 டிப்ளமோ பட்டதாரி. இவர் உடுமலை ஆயில் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் மடத்துக்குளம் அருகே டூவீலரில் வரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதை ஒட்டி அவரின் பெற்றோர்கள் ஜெகனின் உறுப்புகளை தானம் வழங்குவதாக கூறினர். அதனால் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதையொட்டி பழனி ஆர் டி ஓ கண்ணன், வாலிபர் ஜெகனின் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செய்தார்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது