பழனி ஏப்ரல் 2
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் நடைபெற்றது.
பழனியில் புகழ்பெற்ற பங்குனி உத்திரம் திருவிழா, கடந்த மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 7ஆம் நாள் திருவிழாவையொட்டி, கிரிவீதியில் மாலை 4. 30 மணி அளவில், திருத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் திருத்தேரில் வீற்றிருந்த முருகன் வள்ளி தெய்வானை ஆகியோரை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். திருத்தேர் நான்கு கிரிவீதிகளிலும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, திருத்தேர் உலா வந்தது. முன்னதாக பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, பஞ்சாமிர்தக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து முருகப்பெருமானை பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.