June 2, 2026

‘பெண்கள் பலம் வாழ்வாதாரம்’ என்ற பெயரில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சி

‘இந்து தமிழ் திசை’ – கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தின

சென்னை: எதிர்​கால தேவை​களுக்​கான நிதி திட்​ட​மிடல், முதலீடு​கள் குறித்து மக்​கள் ஆராய்ந்து முடி​வெடுக்க வேண்​டும் என சென்​னை​யில் நடந்த ‘இந்து தமிழ் திசை’ – கனரா ரோபேகோ மியூச்​சுவல் ஃபண்ட் சிறப்பு நிகழ்ச்​சி​யில் அறி​வுரை வழங்​கப்​பட்​டது.

பல்​வேறு துறை​களில் பல வழி​காட்டு நிகழ்ச்​சிகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து நடத்தி வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக கனரா ரோபேகோ மியூச்​சுவல் ஃபண்ட் நிறு​வனத்​துடன் இணைந்து ‘பெண்​கள் பலம் வாழ்​வா​தா​ரம்’ எனும் பெண்​களுக்​கான பொருளா​தார முன்​னேற்​றத்தை வலி​யுறுத்​தும் சிறப்பு நிகழ்ச்​சியை சென்னை மயி​லாப்​பூரில் நேற்று முன்​தினம் நடத்​தி​யது.

இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற கோர் பாங்​கிங் சேனல் மற்​றும் இன்​ஸ்​டி டியூஷனல் சேல்ஸ் நேஷனல் ஹெட் கே.கோபி​நாத் பேசி​ய​தாவது: நிதி முதலீடு​களை எவ்​வளவு சீக்​கிர​மாக தொடங்​கு​கிறோமோ, அந்த அளவுக்கு அதன் பலன்​களும் அதி​க​மாக இருக்​கும்.

பொது​வாக நிலை​யான வைப்பு நிதி (எஃப்​டி) போன்ற சேமிப்​பு​கள் வழக்​க​மான வரு​மானத்​துக்கு உதவக்​கூடும். ஆனால், நீண்​ட​கால அடிப்​படை​யில் செல்​வத்தை உரு​வாக்​கு​வதற்கு மியூச்​சுவல் ஃபண்ட் முதலீடு​கள் ஒரு சிறந்த வாய்ப்​பாக இருக்​கும். மியூச்​சுவல் ஃபண்ட் என்​றாலே பங்​குச்​சந்தை ஆபத்து நிறைந்​தது என்ற பொது​வான கருத்து உள்​ளது.

ஆனால் இதில் பங்​குச்​சந்தை தொடர்பு இல்​லாத அரசுப் பத்​திரங்​களில் மட்​டுமே முதலீடு செய்​யப்​படும் பாது​காப்​பான திட்​டங்​களும் உள்​ளன. எனவே எதிர்​கால தேவை​களை திட்​ட​மிடும்​போது எதார்த்​த​மான கணக்​கீடு மிக முக்​கி​யம். பள்​ளிக் கட்டண உயர்​வு, அன்​றாட பயன்​பாட்டு பொருட்​களின் விலை உயர்வு போன்​றவற்றை நம்​மால் தவிர்க்க முடி​யாது.

பணவீக்​கத்​தின் காரண​மாக எதிர்​காலத்​துக்கு மட்​டுமின்​றி, தற்​போதையை வாழ்க்கை முறையை தக்க வைத்​துக் கொள்​வதற்கே கூடு​தல் நிதி தேவைப்​படு​கிறது. இதற்கு மேலாக, எதிர்​பா​ராமல் வரும் மருத்​து​வச் செல​வு​கள் வேறு. எனவே முதலீடு​கள் குறித்து மக்​கள் போதிய விழிப்​புணர்​வுடன் ஆராய்ந்து முடி​வெடுக்க வேண்​டும்.

மக்​கள் தங்​களுக்​குப் பொருத்​த​மான திட்​டங்​களைத் தேர்ந்​தெடுத்து முதலீடு செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். தொடர்ந்து பொருளா​தார நிபுணர் சோம.வள்​ளியப்​பன் பேசுகை​யில், “கல்​வி, தகவல் தொழில்​நுட்​பம் என அனைத்து துறை​களி​லும் பெண்கள் சாதனை படைத்து வரு​கின்​றனர்.

எனினும் நிதி சார்ந்த முதலீட்டு முடிவு​களில் பெண்​களின் பங்​களிப்பு குறை​வாகவே உள்​ளது. பெண்​கள் தங்​களது சேமிப்பு பழக்​கத்தை முதலீ​டாக மாற்ற முன்வர வேண்​டும். அஞ்​சறைப் பெட்​டி​யிலும், வீட்​டிலும் பணத்தை பூட்டி வைப்​பது பணவீக்​கத்​தின் காரண​மாக அதன் மதிப்பை இழக்​கச் செய்​யும்.

பெண்​கள் தங்​களின் சேமிப்பை சரி​யான முதலீட்​டுத் திட்​டங்​களில் ஈடு​படுத்​தி, நாட்​டின் பொருளா​தார வளர்ச்​சி​யோடு தங்​களின் பொருளா​தார நிலை​மை​யை​யும் உயர்த்​திக்​கொள்ள வேண்​டும்.

இளைஞர்​கள் அதி​கம் உள்ள நாடாக இந்​தியா திகழ்​வ​தால், அடுத்த சில தசாப்​தங்​களுக்கு நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி மிகச் சிறப்​பாக இருக்​கும். இந்த வளர்ச்​சியை முதலீட்​டாளர்​கள் தங்​களுக்​குச் சாதக​மாக பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்” என்று குறிப்​பிட்​டார்.

இதையடுத்து நடை​பெற்ற கேள்​வி-ப​தில் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற பெண்​கள் பலரும் பரஸ்பர நிதி​யில் முதலீடு செய்​வது குறித்த தங்​களது சந்​தேகங்ளை நிபுணர்​கள் கே.கோபி​நாத், சோம.வள்​ளியப்​பன் ஆகியோரிடம் கேட்​டறிந்​தனர்.

அதற்கு பதிலளித்த இரு​வரும் சேமிப்​பில் முதலீடு செய்​யும் முறை​கள், அதன்​மூல​மாக பெண்​கள் தங்​களது பொருளா​தார முன்​னேற்​றத்தை அடைவதற்​கான ஆலோ​சனை​கள் மற்​றும் வழி​காட்​டு​தல்​களை வழங்​கி, அவர்​களது சந்​தேகங்​களை தீர்த்​து வைத்​தனர்​.

Spread the love