திமுக கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டக் கழக அலுவலகத்தில்,
கழக துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா A Raja ஆ. ராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழகச் செயலாளர்களுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து உரையாடினார்.
இந்தச் சிறப்பான நிகழ்வில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கழகத்தின் சார்பில் போட்டியிடும் குன்னம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளரான சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி கலந்துகொண்டு கழக செயல்வீரர்களின் முழுமையான ஆதரவையும், ஆ. ராசா ஊக்கமளிக்கும் ஆலோசனைகளையும் பெற்றனர்.

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்