போபால்: மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டம் டோரஹா கிராமத்தில் மதரசா பள்ளி உள்ளது. குடியரசு தினத்தன்று மாநில காவல் துறை ஏடிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங் அந்த மதரசா மாணவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றினார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் சிங் கூறும்போது, ”டோரஹா கிராமத்தில் உள்ள மதரசாவின் மவுலானா எனது பழைய நண்பர். குடியரசு தினத்தன்று மாணவர்களிடையே உரையாற்றுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் பெற்று வரும் கல்விக்காக அவர்களுக்கு நான் வாழ்த்து கூறினேன். பகவத் கீதை பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்துக்கு அறிவொளி புகட்டி வருவதால், புனித குரானுடன் அதையும் படிக்குமாறு மாணவர்களிடம் கூறினேன்” என்றார்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்