March 19, 2026

மும்மதத்தினர் பங்கேற்ற இஃப்தார் விழா 

மார்ச் 18

திருப்பூரில் தலைமையாகக் கொண்டு தமிழக முழுவதும் பொது மக்களுக்காகவே சேவை செய்து வரும் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் முன் மதத்தினர் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமத்துவத்தை போற்றும் மதத்தில் பங்கேற்று சிறப்பித்தனர் கலந்து கொண்ட அனைவருக்கும் கிப்ட் வழங்கப்பட்டது இதில் நிறுவனத் தலைவர் இந்திராசுந்தரம். செயலாளர் ராஜா முகமது. விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் இதில் மௌலவி முஃப்தி. உமர் பாரூக் மழாஹிரி தலைமை இமாம் மஸ்ஜிதே நூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் திருப்பூர். ஆன்மீக சொற்பொழிவாளர் சபாபதி. பாரதியார் பிலிக்ஸ் ஆகிய மும்மத தலைவர்கள் பங்கேற்ற விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

Spread the love