September 18, 2026

மோடி சகாப்தம்: முதன்மை நிலைக்கு முன்னேறும் அடித்தட்டு மக்கள்!

இந்​திய குடியரசுத் தலை​வ​ராக நான் 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பணி​யாற்​றிய ஐந்து ஆண்​டு​களில், பிரதம​ராக நரேந்திர மோடியை மிக நெருக்​க​மாகக் கவனித்​துள்​ளேன். அந்த அனுபவத்​தின் அடிப்​படை​யிலும் பொது வாழ்​வில் அவருட​னான எனது தொடர்​பின் அடிப்​படை​யிலும் அவரது பிறந்த தினத்தையொட்டி சில எண்​ணங்​களை நான் பகிர்ந்து கொள்ள விரும்​புகிறேன்.

2001 அக்​டோபரில் குஜ​ராத் முதல்​வ​ராக​வும், 2014 முதல் பிரதமராக​வும் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசின் தலைவராக 25 ஆண்​டு​களுக்கு மேலாகப் பணி​யாற்றி வரும் மோடி, ‘அனை​வரும் இணைவோம், அனை​வரும் உயர்​வோம்’ என்னும் எளிமை​யான ஆனால் மாற்​றத்தை ஏற்​படுத்​தக்​கூடிய கருத்​தைத் தொடர்ந்து முன்​னெடுத்து வரு​கிறார்.

பல தசாப்​தங்​களாக வடகிழக்​குப் பிராந்​தி​யம் இந்​தி​யா​வின் தொலை​தூர விளிம்​புப் பகு​தி​யாக பேசப்​பட்​டது. ஆனால், பிரதமர் மோடி​யின் ஆட்​சி​யில் அது இந்​தி​யா​வின் முன்​னேறிய முகமாகவும், தென்​கிழக்கு ஆசி​யா​விற்​கான நுழைவு வாயிலாகவும் முன்​னிலைப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. 2014 நவம்​பர் முதல் பிரதமர் மோடி அப்​பகு​திக்கு 83 முறைக்​கும் மேல் பயணித்துள்​ளார். இப்​பயணங்​கள் போக்​கு​வரத்​து, உள்கட்டமைப்பு, முதலீடு, அமை​திக்​கான தொடர்ச்​சி​யான முன்​முயற்சி ஆகிய​வற்​றுடன் இணைந்​துள்​ளன. அப்​பகு​தி​யில் 12 முக்கிய அமைதி ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி​யுள்​ளன.

அத்​துடன் 2014-15-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான கால கட்​டத்​தில் வளர்ச்​சிக்​காக ரூ.7 லட்​சம் கோடிக்கு மேல் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது முந்​தைய தசாப்​தத்​தில் ஒதுக்​கப்​பட்ட சுமார் ரூ.1.4 லட்​சம் கோடி​யுடன் ஒப்பிடும்​போது பல மடங்கு அதி​க​மாகும். துடிப்​புமிக்க கிராமங்கள் திட்​டம், எல்​லைப் பகு​தி​களில் சாலைகள், போக்குவரத்​து, சுற்​றுலா, வாழ்​வா​தா​ரம், அத்​தி​யா​வசிய சேவைகள் ஆகிய​வற்​றின் மூலம் இக்​கருத்​துக்கு ஒரு முறைப்படுத்தப்​பட்ட அர்த்​தத்தை அளிக்​கிறது.

வரலாற்று ரீதி​யாகப் பின்​தங்​கிய 112 மாவட்​டங்​களை நிரந்தர பின்​தங்​கியப் பகு​தி​களாக இல்​லாமல் சுகா​தா​ரம், கல்​வி, உள்கட்டமைப்​பு, வாழ்​வா​தா​ரங்​களில் வளர்ச்​சியை விரைவுபடுத்​தக்​கூடிய இலக்​கு​கள், ஒருங்​கிணைப்​பு, போட்டி அடிப்படையிலான வளர்ச்சி முறை ஆகிய​வற்றை இத்​திட்​டம் அறிமுகம் செய்​தது.

பிரதமரின் ஜன்​மான் திட்​டம், குறிப்​பாக நலிவடைந்த 75 பழங்​குடியினர் குழுக்​கள் அனைத்​தை​யும் உள்​ளடக்கி அவர்​களுக்கு தரமான வீடு​கள், சாலைகள், குடிநீர், சுகா​தா​ரம், இதர அடிப்படைத் தேவை​களை அளிப்​ப​தில் கவனம் செலுத்​துகிறது.

இதற்கு முன்பு புறக்​கணிக்​கப்​பட்​டிருந்த குடும்​பங்​களை 59 கோடிக்​கும் அதி​க​மான மக்​கள் வங்​கிக் கணக்​கு​கள் முறை​யான நிதி அமைப்​புக்​குள் சேர்த்​துள்​ளன. சவு​பாக்யா திட்​டம் 100% கிராமப்​புற மின்​மய​மாக்​கலுக்கு வழி​வகுத்​தது. இலவச சமையல் எரி​வாயு சிலிண்​டர் திட்​ட​மான உஜ்​வாலா திட்​டம் 10 கோடிக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​களுக்​குப் புகை​யில்லா சமையல் எரி​வாயு வசதியை அளித்​துள்​ளது. ஜல் ஜீவன் இயக்​கம் 13 கோடி கிராமப்புற குடும்​பங்​களுக்கு குழாய் வழிக் குடிநீர் இணைப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

முத்ரா கடன்​களில் 68 % மகளிருக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. அத்துடன் பிரதமரின் சாலை​யோர வியா​பாரி​கள் மேம்​பாட்​டுத் திட்டப் பயனாளி​களில் 46 சதவீதம் பேர் மகளிர் ஆவர். லட்​சா​திபதி சகோ​தரி திட்​டம் கிராமப்​புற மாற்​றத்​தின் மையப்​புள்​ளி​யாக மகளிரின் பொருளா​தார அதி​காரமளித்​தலை முன்​னிலைப்​படுத்​துகிறது. முன்​னேற்​ற​தின் உண்​மை​யான அளவு​கோல் என்​பது மேற்​கூரை எந்த அளவு உயர்ந்​துள்​ளது என்​பது கிடை​யாது.

மாறாக, அதன் கீழ் எத்​தனை பேர் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளனர் என்​ப​தில்​தான் உள்​ளது. அது​வே, மோடி சகாப்​தத்​தின் வரைவுக் கொள்​கை​யாகும். அதாவது, ஒரு காலத்​தில் விளிம்​பில் இருந்​தவர்​கள் நாட்டின் முதன்​மைப் பகு​திக்​குள்​ நுழைவதற்​காக இனிமேல்​ காத்​திரு​க்க வேண்டியதில்லை. அவர்களே அதை வரையறுக்கின்றனர்.

Spread the love