ஏப்ரல் 18 முதல் துவங்கிய மவ்லிது ஷரீப் நிகழ்ச்சியில் 23 நாட்கள் மார்க்க அறிஞர்கள் இறை வசனங்கள் ஓதுகின்றனர். தொடர்ந்து மே 28 அன்று பச்சை வர்ணக் பிறைக் கொடி யானை மீது வைத்து குதிரைப் படை சூழ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் உலக நன்மைக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் இந்த விழாவில் திரளான யாத்திரீகர்கள் மற்றும் தர்கா நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலகப் புகழ்பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 852வது ஆண்டு சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது