March 17, 2026

விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினாரா பவன் கல்யாண்.. தவெகவின் முடிவை சொன்ன செங்கோட்டையன்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அடுத்தடுத்த பணிகளில் கட்சிகள் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டன. இதனிடையில் என்டிஏ கூட்டணியில் விஜய்யை இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுக்குறித்து தவெக நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்காக அனைத்து கட்சிகளும் காத்திருந்த நிலையில், நேற்றைய தினம் தேர்தல் ஆணையம் இது சம்பந்தமான அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டும் முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல்

  

Learn How to Build Wealth with Top Traders & Realtime AI SignalsTrade Smartதற்போதைய சூழலில் திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணியுடன் நடக்கவிருக்கு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகவுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதனிடையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இதுவரை கூட்டணி அமைப்பதற்கு எந்த கட்சியும் முன்வரவில்லை. விஜய்யை முதலமைச்சராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அக்கட்சி உறுதியாக உள்ளது.

பவன் கல்யாண் முயற்சி?

இதற்கிடையில் என்டிஏ கூட்டணியில் விஜய்யை இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக கூறப்பட்டது. விஜய்யிடம் துணை முதலமைச்சர் பொறுப்பு தருவதாகவும், 40 தொகுதிகளுக்கு மேலாக வழங்குவதாகவும் பவன் கல்யாண் பேசியதாகவும் தகவல்கள் வெளியானது. இது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தவெகவை சார்ந்தவர்களும் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர்.

தவெக நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்

இந்நிலையில் இந்த தகவல் தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசியுள்ளார். அதன்படி, பவன் கல்யாண் கூட்டணி தொடர்பாக விஜய்யிடம் பேசினார் என்பதை போன்ற செய்தி எனக்கு கிடைக்கல்லை. சிபிஐ மூலமாக என்டிஏ கூட்டணியில் இணைவதற்கு விஜய்க்கு எந்த விதமான அழுத்தமும் தரப்படவில்லை. நேற்றைய தினம் விசாரனைக்காக அழைக்கப்பட்டார். அவரும் அங்கு சென்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஆறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம்.. மீண்டும் திமுக ஆட்சி.. அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் ரெடி

எங்களையும், தலைவரையும் பொறுத்த வரைக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக தான் அனைத்தையும் விட்டுவிட்டு வந்திருக்கிறார் என்றார். நேற்றைய தினம் நான் ஊரில் இருந்த சமயத்தில் மக்கள் ஆர்ப்பரித்து வந்தார்கள். மேலும், தவெக சார்பாக போட்டியிடுவதற்கு 234 தொகுதிகளிலும் சிறந்த வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.

பரப்புரை கூட்டத்தில் சொன்ன தகவல்

இதனிடையில் நேற்றைய தினம் ஈரோட்டில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், விஜய் தான் முதலமைச்சர் என்று கூறுபவர்களுடன் மட்டுமே கூட்டணி. நம்மை கூட்டணியில் இணைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அதெல்லாம் நடக்காது. நமக்கு தன்மானம் உள்ளது என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

இதன் மூலமாக விஜய்யை முதலமைச்சராக ஏற்பவருடன் மட்டுமே கூட்டணி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன். மற்றொரு பக்கம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கடைசி நேரத்தில் கூட என்டிஏ கூட்டணியில் விஜய் இணையலாம் என கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் அரசியல் களம் பயங்கர பரபரப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love