March 22, 2026

100 சதவிகிதம் வாக்களியுங்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே

மார்ச் 21தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல்-2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி க.சங்கமித்திரை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி இயக்குநர் (பயிற்சி) செல்வி.ஹர்ஷா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.ரஞ்சிதாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவனண், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதீஸ்குமார் ஆகியோர் உள்ளார்.

Spread the love