100 யூனிட் இலவச மின்சாரத்தை தமிழக மக்களுக்கு கொடுத்தது திமுக அல்ல என்று ஸ்டாலினை முதல்வர் விமர்சித்து பேசினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், திருச்சியில் நடந்த நன்றி கூட்டத்தில், 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் கௌரவம் திமுகக்கு அல்ல, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கே சொந்தம் என கூறினார். டாஸ்மாக் ஊழல் கோப்புகளை மூட திமுக அரசு அலைந்தது என்றும், தற்போதைய 200 யூனிட் திட்டத்தை விமர்சிப்பவர்கள் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10-தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் விஜய்க்கு மதிமுக எம்.பி.துரை வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார்.

More Stories
கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்: அன்பகத்தில் மூவர் சிலைகளை திறக்கும் மு.க.ஸ்டாலின்!
இளம்பெண்ணுக்கு தவெக நிர்வாகிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார், அண்ணாமலை கண்டனம்
“முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது” – அன்புமணி அதிருப்தி