அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் அயதுல்லா அலி காமேனி. 1989 முதல் 2026 வரை ஈரானின் ஒட்டுமொத்த அதிகாரமும் இவர் கையில் தான் இருந்தது. இந்தசூழலில் தான், கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டங்களின்படி, இறந்தவர்கள் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றபோதிலும், வளைகுடா போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வந்த நிலையில், கமேனியின் இறுதிச் சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது .

இந்தசூழலில் தான், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக கடந்த ஜூன் 17 அன்று, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்ததிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இதையடுத்து, மத்திய கிழக்கில் அமைதி திரும்பியிருக்கும் நிலையில், ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி இறுதிச் சடங்கு குறித்தான அறிவிப்பை சமீபத்தில் ஈரான் வெளியிட்டது

More Stories
வெனிசுலாவில் அடுத்தடுத்து பூகம்பம்: நிலைகுலைந்த நகரங்கள் – அவசரநிலை அறிவிப்பு
தொடரும் விரிசல் |அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்ரேல்.. அதிரடி முடிவெடுத்த நெதன்யாகு!
’போரில் வென்ற ஈரான்..’ – 92%-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களின் கருத்தால் அதிர்ச்சி!