“பன்மைத்துவம்தான் இந்தியாவின் வலிமை” – முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல என அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வேலூர், விருதம்பட்டு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” என கூறியவர் அண்ணல் அம்பேத்கர். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்.
இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல. முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

More Stories
இன்று 14.04.2026 செவ்வாய்க்கிழமை, திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
’’செல்வச் செழிப்பில் வளர்ந்த ஸ்டாலினுக்கு மக்கள் கஷ்டங்கள் தெரியுமா..?’’
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…