ரோட்டர்டாம்: நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியை எதிர்த்து விளையாடியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங் (7-வது நிமிடம்), ஷில்லானந்த் லக்ரா (13-வது நிமிடம்), நீலகண்ட சர்மா (35-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஜெர்மனி அணி சார்பில் 45-வது நிமிடத்தில் ரஃபேல் ஹார்ட்கோப் கோல் அடித்தார். இந்த போட்டி இந்திய அணியின் மன்ப்ரீத் சிங்குக்கு 413-வது சர்வதேசப் போட்டியாக அமைந்தது. இதன் மூலம், இந்தியாவிற்காக அதிகப் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

More Stories
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை
மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி