
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ)யின் 18-ஆம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நகர் பொருளாளர் கலீல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் மாநில துணைத் தலைவர் பி. அப்துல் ஹமீது சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கீழக்கரையில் நிலவி வரும் கடுமையான மின்தடையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்; தவறினால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், பள்ளி மாணவர்களின் அதிவேக இருசக்கர வாகனப் பயணத்தை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகங்களும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி அவற்றை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்