
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ)யின் 18-ஆம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நகர் பொருளாளர் கலீல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் மாநில துணைத் தலைவர் பி. அப்துல் ஹமீது சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கீழக்கரையில் நிலவி வரும் கடுமையான மின்தடையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்; தவறினால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும், பள்ளி மாணவர்களின் அதிவேக இருசக்கர வாகனப் பயணத்தை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகங்களும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி அவற்றை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்