July 21, 2026

கவுன்சிலர் இல்லாததால் தான் இந்த நிலை.. உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சர் கீர்த்தனா ஓப்பன் டாக்

உள்ளாட்சி தேர்தலில் நீங்க மறுபடியும் விசில் அடிச்சா மட்டும் தான் நினைச்ச மாற்றத்தை கொண்டுவர முடியும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் கீர்த்தனா இடம்பெற்றுள்ளார். இவருக்கு தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு தன்னுடைய தொகுதியான சிவகாசிக்கு மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வருகை தந்தார் .அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், சிவகாசியில் இன்று வெற்றி பெற வைத்துள்ளீர்கள்.. உங்களுக்கு நன்றி அதேபோல் முதலமைச்சராக விஜய் அவர்களே உட்கார வைத்து அழகு பார்த்து உள்ளீர்கள்.

விஜய் ஆட்சியில் 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடல்

அவர் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு இந்த பொறுப்பை கொடுத்துள்ளீர்கள் கண்டிப்பாக உங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களையும் நாங்கள் செய்து தருவோம் .இன்னொரு கடமை உங்களுக்கு ஒன்று உள்ளது அது என்ன கடமை என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் இன்றைக்கு கேட்கும் அடிப்படை வசதிகள், சாலை பிரச்சனை ,ரோடு பிரச்சனை ,தெருவிளக்கு பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை எல்லாம் தீர வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தல் ஒன்று வரும். அந்த உள்ளாட்சி தேர்தலிலும் நீங்கள் மறுபடியும் விசில் அடிச்சா மட்டும் தான் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கூறினார்.

  

திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி

மறுபடியும் விசில் அடிங்க..

தொடர்ந்து பேசியவர் இன்னும் ஒரு முறை உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் ஒரு முறை விசில் அடிங்க கண்டிப்பா உங்களுக்கு தேவையான எல்லாம் நாங்கள் நிறைவேற்றி தருவோம் என்று கூறினார்.மேலும் டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு ஆட்சி பொறுப்பேற்று சுமார் 800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடி உள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கோவில்களுக்கு அருகே உள்ள கடைகளை மூடி உள்ளது. மேலும் சிவகாசியில் எட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் இருந்ததை முதலமைச்சர் விஜய் அண்ணா மூடியுள்ளார்.

கவுன்சிலர் இல்லாததால் தான் இந்த நிலை

இதை விட பெரிய சாதனை வேறு என்ன வேண்டும். கடந்த ஆட்சியில் இது போன்ற நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தற்பொழுது முதலமைச்சர் விஜய் பெண்கள் பாதுகாப்பில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். இன்றைக்கு 24 மணி நேரமும் எம்எல்ஏ அலுவலகம் திறந்து இருக்கிறது 24 மணி நேரமும் நாங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை எனக்கு நான் ஒரு மனுக்கள் வந்துள்ளது. அந்த மனுக்களில் கிட்டத்தட்ட டாஸ்மார்க் கடை மூடவேண்டும் என்பதுதான் பெருமளவில் உள்ளது. இதில் 39 மணக்களை உடனடியாக தீர்த்துக் கொடுத்திருக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து தவெக அமைச்சர் ஓப்பன் டாக்

குறிப்பாக ஒரு சட்டமன்ற பொறுப்பாளராக நம்மால் எதை தீர்க்க முடியுமோ அதெல்லாம் தீர்த்துக் கொடுத்திருக்கிறோம் என்று கூறினார். ஆனால் லோக்கலில் நமக்கு கவுன்சிலர் இல்லாத ஒரு காரணத்தினால், இந்த அடிப்படை வசதிகள் எல்லாம் செய்ய முடியாமல் இருக்கிறது. இன்னும் ஆறு மாதத்திலோ அல்லது எட்டு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் போது நீங்கள் கட்டாயம் மீண்டும் விசில் அடிக்க வேண்டும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இன்றைக்கு லஞ்சம் இல்லாத ஊழலற்ற ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்து கொண்டிருக்கிறார் இதனை தொடர்ந்து நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலுக்கு தயவு செய்து ஓட்டு போடுங்க என்று கூறினார்.

Spread the love