மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற ரூ. 229 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக…

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க ரூ.229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:
”கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற ரூ. 327 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்றி அமைக்க ரூ. 229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 2,15,39,333 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம் ரூ.69,087 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.214 கோடியில் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

More Stories
இராசிபுரம்:ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைத்த மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார். .
மதுரை, கோவை மெட்ரோ ரயில்! மத்திய அரசு நிராகரித்ததாக பேரவையில் அறிவிப்பு!