மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி…

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
நாட்டில் தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாகின்றன.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை எம்பிக்கள் என். ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, தம்பிதுரை, ஜி.கே. வாசன், பி. செல்வராசு உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடையவுள்ளது.

More Stories
“நட்பு தினத்தை போல் கைத்தறி நாளையும் கொண்டாடுங்கள்” – பிரதமர் மோடி வேண்டுகோள்
“ஒன்றுபட்ட குரல்கள் ஒலிக்கும்போது மட்டுமே இந்த அரசு பணியும்” – ராகுல் காந்தி
எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் – முக்கிய அம்சம் என்ன?