March 13, 2026

தமிழ்நாடு பிராமண சமாஜம் தலைவராக என் ஹரிஹரமுத்து  பொறுப்பேற்றார்

பழனி மார்ச் 12

பழனியில் தமிழ்நாடு பிராமண சமாஜசத்தின் 2026 மற்றும் 2029 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாநில தலைவராக பழனி கண்பத் கிரேண்ட்  ஹோட்டல் அதிபர் என் ஹரிஹரமுத்து, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழக்கறிஞர் அனிருத் கர்கா வழங்கினார். அதேபோல் செயலாளராக ரமேஷ்குமாரும், பொருளாளராக வைத்தியநாதன் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நிர்வாக குழு பொறுப்பாளராக 68 பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Spread the love