பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என விளக்கம்…
சென்னை பெட்ரோல் நிலையங்கள் குவியும் மக்கள்– EPS
நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என்ற செய்தி உண்மையல்ல என்று எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளன.
மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவுள்ளதாகவும் புரளிகள் கிளம்பியது.
இதன்காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்வேறு பெட்ரோல் நிலையங்களில் நேற்று இரவுமுதல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பெட்ரோல் நிரப்ப வரிசையில் காத்திருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.Advertise with us
இந்த நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோல் நிறுவனங்கள் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளன.
பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் உட்பட 32 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு
நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு நீடா கான் கைது – பின்புலம் என்ன?