ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் அஇஅதிமுக சார்பில் திமுக ஆட்சிக்கு எதிராக கண்டன தெருமுனைப் பிரச்சாரம் அதிமுக நகர் செயலாளர் ஜகுபர் உசேன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியதாக இருப்பதாக கடுமையாக குற்றம்சாட்டினார். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களை வழிகெடுக்கும் சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு திருப்புல்லாணி ஒன்றிய கழகச் செயலாளர் கருப்பையா, சங்கர பாண்டியன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராமசேது, முன்னாள் சேர்மன் ராமமூர்த்தி, முன்னாள் ராம்கோ தலைவர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் முஜிப் ரஹ்மான், இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
உடன்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை,ரெக்கம் ரூ 25 ஆயிரம் கொள்ளை:- மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்செந்தூர் .மார்.13
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சு.கணபதி தலைமையில் நடைபெற்றது.