March 30, 2026

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று முடிந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக, அருள்மிகு பாதவிநாயகர் திருக்கோயில் பின்புறம் உள்ள மங்கம்மாள் மண்டபம் அருகில் கற்சிலா வேல்  நிறுவப்பட்டது. அதன் மண்டல பூஜை 48 ஆம் நாள் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த பூஜையில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Spread the love