April 27, 2026

பழனி முருகன் மலைக் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார் 

பழனி ஏப்ரல் 27 

பழனி முருகன் மலை கோயிலுக்கு நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் வருகை புரிந்தார். ரோப் கார் மூலம் சென்ற அவர் மலைக் கோயிலில் முருகப்பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்பு போகர் சன்னதியில்  தரிசனம் செய்தார். பின்பு பழனி அடிவாரத்தில் உள்ள வனதுர்க்கை அம்மன்  கோயில், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில், மற்றும் திருஆவினன்குடி முருகன் கோயில் ஆகிய கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார். பின்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் சேகர்பாபு பாபு கூறியதாவது

 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் கவர்னர் மாளிகையில் 2வது முறையாக ஒலிக்கும் இவ்வாறு அவர் கூறினார். இதில் அறங்காவலர் குழு தலைவர் கே எம் சுப்பிரமணியன் பங்கேற்றார்.

Spread the love