பழனி ஏப்ரல் 29
பழனி முருகன் மலை கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை பணம் என்னப்பட்டது. இதில் பணமாக ரூபாய் 6 கோடியே, 97 லட்சத்து, 8 ஆயிரத்து,187 கிடைத்தது. வெளிநாட்டு கரன்சிகள் 2240 ம், தங்கம் 1.035 கிலோவும், வெள்ளி 16.793 கிலோவும் கிடைத்தது. மேலும் பழனி திரு ஆவிணன்குடி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 20 லட்சத்தி, 53 ஆயிரத்து, 634 கிடைத்தது. பழனி மீனாட்சி அம்மன் கோவிலில் ரூபாய் 18,480 ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் 1 லட்சத்து, 21 ஆயிரத்து, 137 கிடைத்தது. ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரூபாய் 20.868ம் கிடைத்தது. ஆக மொத்தம் ரூபாய் 7 கோடியே, 19 லட்சத்தி, 22,306 கிடைத்தது. உண்டியல் என்னும் காணிக்கை நிகழ்ச்சியில் பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து பங்கேற்றார்

More Stories
மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உட்பட தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்ற ராஜாசெல்வம்
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகம் அலுவலகம் திறப்பு விழா