புதுச்சேரி: நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. கட்சியின் தலைவரான விஜய் விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், சென்னை தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு புஸ்ஸி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கண்ணன் கட்சியான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர்.
விஜய் கட்சி தொடங்கியவுடன் தனது வாக்கை செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கர் தொகுதிக்கு இடமாற்றம் செய்து கொண்டார் புஸ்ஸி ஆனந்த். இப்போது தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த்துக்கு 2 மாநிலங்களில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை கிடைத்துள்ளது.

More Stories
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
அதிமுக கப்பலை தளபதி மூழ்க விடமாட்டார்! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை..” – CPI வீரபாண்டியன்