சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இட ஒதுக்கீடு தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களுக்கு அமைச்சர் அருண் ராஜ் தனது சமூக வலைதள பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். மாநில ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (All India Quota) மாற்றுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக வெற்றி கழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அருண் ராஜ் -ன் அந்த பதிவில், தமிழ்நாட்டில் மொத்தம் 422 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளதாகவும், அதில் 219 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும், மீதமுள்ள இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாநில கோட்டா
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் “All India merit list” மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
151 இடங்கள் சரண்டர்
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!
பழனி ரயில் நிலையத்தில் நடைபெறும் 14 கோடியில் நடைபெறும் பணிகளை கோட்டை மேலாளர் ஆய்வு
இண்டியா கூட்டணியை விட்டு விலகும் திமுக? – இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாஜக