மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜய், தனது பேச்சின் துவக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பா.ஜ.க. அழுத்தம் தருவதாக வெளிவரும் யூகங்கள் குறித்துப் பேசினார். இதற்கடுத்ததாக தி.மு.க. – அ.தி.மு.க. குறித்து பேச ஆரம்பித்தார்.
“தமிழகத்தை இதற்கு முன் ஆண்டவர்கள் பா.ஜ.கவுக்கு நேரடியாக ‘சரண்டர்’ ஆனார்கள். இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் மறைமுகமாகச் ‘சரண்டர்’ ஆகியிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு, இதற்கு முன் இருந்தவர்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் சக்தி, தீய சக்தி ஆகிய இருவரும் தமிழகத்தை ஆளவே கூடாது” என்று குறிப்பிட்டார்.

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு