புதுடெல்லி: இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது. இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது ‘சி-295’ ராணுவப் போக்குவரத்து விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்கு பின்னணியில் இருந்த ஒட்டுமொத்தக் குழுவுக்கும் இந்திய விமானப்படை தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து