June 13, 2026

துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளரான ஜஸ்பால் ராணா காலமானார்

புதுடெல்லி: ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் தங்​கப்​பதக்​கம் வென்​றவரும், துப்பாக்கி சுடுதல் பயிற்​சி​யாள​ரு​மான ஜஸ்​பால் ராணா மாரடைப்​பால் கால​மா​னார். அவருக்கு வயது 49.

இந்​தி​யா​வின் மிகச்​சிறந்த துப்​பாக்கி சுடு​தல் வீரர் மற்​றும் சர்வதேச அளவி​லான பயிற்​சி​யாளர்​களில் முதன்​மை​யானர் ஜஸ்பால் ராணா. இவர், இந்​தி​யா​வுக்​காக ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் 4 தங்​கம், 2 வெள்​ளி, 2 வெண்​கலப் பதக்​கம் வென்றிருந்​தார்.

காமன்​வெல்த் விளை​யாட்​டில் 9 தங்​கம், 4 வெள்​ளி, 2 வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​யிருந்​தார். வீர​ராக மட்​டுமின்றி பயிற்சியாளாராக, ஒலிம்​பிக்​கில் 2 வெண்​கலப் பதக்​கங்​களை வென்ற மனு பாகர், சவுரரப் சவுத்​ரி, அனிஷ் பன்​வாலா போன்ற திறமை​யான வீரர்​களை​யும் உரு​வாக்​கி​யுள்​ளார்.

இந்த நிலை​யில், ஜஸ்​பால் ராணா, ஜெர்​மனி​யின் முனிச் நகரில் நடை​பெற்ற ஐஎஸ்​எஸ்​எஃப் உலகக் கோப்பை துப்​பாக்கி சுடு​தல் போட்​டி​யில் கலந்​து​கொண்டு நேற்று முன்​தினம் நாடு திரும்​பி​னார். அப்​போது அவருக்​குத் திடீரென நெஞ்சு வலி ஏற்​பட்​டுள்​ளது. இதனால், அவர் உடனடி​யாக டெல்லி உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டார்.

அவரது இதயத்​தில் அடைப்பு இருந்​ததைக் கண்​டறிந்த மருத்​து​வர்​கள் ஸ்டென்ட் பொருத்​தினர். இந்​நிலை​யில் திடீரென நேற்று காலை அவரது உயிர் பிரிந்​தது.

அவரது மரணம் இந்​திய துப்​பாக்கி சுடு​தல் விளை​யாட்​டுத்​துறையை அதிர்ச்சி அடைய​வைத்​துள்​ளது.

இந்​திய துப்​பாக்கி சுடு​தல் அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாள​ரான இவருக்கு 1994-ம் ஆண்​டில் அர்​ஜுனா விருதும், 1997-ம் ஆண்​டில் பத்ம விருதும், 2020-ம் ஆண்​டில் துரோணாச்​சார்யா விருதும் வழங்கி மத்​தி​ய அரசு கவுர​வித்​திருந்​தது.

Spread the love