கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு விஜய் வருகை தந்துள்ளார். இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் கணக்கு குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலத்தின் கொல்லூரில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார். சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றப்படும் அன்னை மூகாம்பிகையை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு தடைகள் மற்றும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர்களாக அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மூகாம்பிகை கோவில் வருகை

தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றது அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படும் நிகழ்வாக மாறியுள்ளது. கர்நாடகாவில் அவர் சென்ற இடமெல்லாம் ஏராளமான மக்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.மங்களூரு வந்தடைந்த முதலமைச்சர் விஜயை கர்நாடக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு

அதன்பின்னர் சாலை மார்க்கமாக மூகாம்பிகை கோவிலுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று அவரை பார்க்க ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.பல இடங்களில் மக்கள் கைகளை அசைத்து வரவேற்பு அளித்ததுடன், அவரது பெயரை முழக்கமிட்டும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.நடிகராக இருந்த காலத்திலிருந்தே விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
கர்நாடகா அரசு அதிகாரிகள் வரவேற்பு

தற்போது அவர் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவருக்கு கிடைக்கும் வரவேற்பு மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மூகாம்பிகை கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், கோவிலுக்கு 1.6 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட காணிக்கையையும் வழங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திருச்செந்தூர் முருகன் கோவில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கும் விஜய் சென்றிருந்தார்.
வீடியோ
விஜய் வழிபாட்டு தலங்களுக்கு செல்வது வழக்கம்

தனது தனிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் பல்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. விஜய்ய்யின் வருகையால் இந்த கோவில் மேலும் கவனம் பெற்றுள்ளது. கேரளா பயணத்தின் போது கிடைத்த வரவேற்பு போலவே,கர்நாடகாவில் அவருக்கு கிடைத்த இந்த வரவேற்பு தென் இந்திய அரசியலிலும் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு மற்றொரு மாநிலத்தில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் ஆதரவு கிடைப்பது கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
மாநில எல்லைகளை தாண்டும் விஜயின் செல்வாக்கு

2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய அரசியலில் விஜய் எந்த வகையான பங்கை வகிக்கப் போகிறார் என்பது குறித்த விவாதங்களும் தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், பிற மாநிலங்களிலும் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு எதிர்கால அரசியல் சூழலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.2026-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தாலும், தவெக ஒரு மாநிலக் கட்சியாகவே தற்போதைக்கு அறியப்படுகிறது. 2029 பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான எம்பி (MP) இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம் மத்திய அரசிலும், தேசிய அரசியலிலும் தவெக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற இலக்கு வைத்துள்ளது.
https://x.com/ActorVijayTeam/status/2065385380359364926?s=20
தேசிய அரசியலுக்கு புதிய சிக்னலா?

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்த சில முக்கிய கட்சிகள் மற்றும் அதிமுக-விலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் தவெக-வை நோக்கி நகர்வதால், 2029-ல் ஒரு வலுவான தேசிய/மாநிலக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்கித் தலைமை தாங்குவது விஜய்யின் முக்கிய இலக்காகும்.தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் தவெக-வின் வாக்கு வங்கியைத் தக்கவைப்பது மற்றும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறுவது இவர்களின் பிரதான நோக்கம். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் முதன்மைக் கட்சியாகத் திகழத் திட்டமிட்டுள்ளனர்.

More Stories
ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு கூடாது: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்
61 நாள் தடைக்காலம் நாளை நிறைவடைகிறது: மீன்பிடி தொழிலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு