இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜா மரணமடைந்ததை அடுத்து, அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது உடல் தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று மாலை 3 மணிக்கு அங்குள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கின்போது, முழு அரசு மரியாதை வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். உடல்நலக் குறைவால் காலமான பாரதிராஜாவின் உடல், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

Bharathiraja
அப்போது அவரது உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார். கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

More Stories
ஓய்வூதியத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி குறைப்பு – முதல்வர் விளக்கமளிக்க தலைமை செயலக சங்கம் வலியுறுத்தல்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சர் விஸ்வநாதன் ஆலோசனை