அதிக பாரம் மற்றும் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாத 12 வாகனங்கள் சிறைபிடிப்பு.

இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு M.பதுவைநாதன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. A.செல்வகுமார் அவர்கள் இராசிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மொத்தம் 12 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது,
இச்சிறப்பு வாகன தணிக்கை மூலமாக அரசுக்கு சுமார் 3.80 லட்சம் ரூபாய் இணக்கக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறப்பு வாகன தணிக்கை இராசிபுரம் பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு M.பதுவைநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்