ஒட்டன்சத்திரம் மார்ச். ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி 7-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அர.சக்கரபாணி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 1996 முதல் 2021 வரை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து 6 முறை வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை தமிழக அரசு தலைமை கொறடா மற்றும் 2011 முதல் 2021 வரை திமுக கொறடாவாக இருந்தார். 2021 முதல் 2026 வரை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பதவி வகித்தார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.ஏ. (பொருளாதாரம்) படித்துள்ளார். தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இவர் நேற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அர.சக்கரபாணி
7-வது முறையாக களம் இறங்கியுள்ள இவர் வெற்றிபெற்று சாதனை படைப்பார் என்று ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More Stories
பெரம்பலூர், மார்ச்.29-முந்திரிக் காட்டு மண்ணில் பிறந்து பொறியாளராக பட்டம் முடித்தபின், அரசியலுக்கு வந்து சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை அளிப்பதில் மிக முக்கியமானவர் திரு எஸ்.எஸ்.சிவசங்கர்.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் டாக்டர்.எஸ்.டி.ஜெயலட்சுமி அவர்களுக்கு குன்னம் வேட்பாளர் சா.சி.சிவசங்கர் வாழ்த்து தெரிவித்தார்
குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மீண்டும் திமுகவில் போட்டியிடுவதை முன்னிட்டு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களை சந்தித்து வெற்றி வேட்பாளர் சா.சி.சிவசங்கர் வாழ்த்துப் பெற்றார்.