கரூர் பலி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார்.
கரூர் பலி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, முன்னதாக, தவெக தலைவர் விஜய் தவெக பொதுச் செயலர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் ஆகியோர் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.
இதனிடையே, கரூர் பலி தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சார்பில் சிபிஐக்கு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.Advertise with us
இதைப் பரிசீலித்து, அவர் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.
இது தொடர்பாக செந்தில் பாஜாஜி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..Advertise with us
வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories
திருச்சி – புதுக்கோட்டை சாலையில் விபத்துகளைத் தவிர்க்க அதிரடி நடவடிக்கை: துரை வைகோ எம்.பி. கோரிக்கை!
எழும்பூர் நிலையத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்க மின் ஏலம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
அலங்காநல்லூர் அருகே குமாரம்