சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்தான கோலியின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
நியூலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் உள்ள கேன் வில்லியம்சன் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம், அவரின் 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது.

கேன் வில்லியம்சன்X
தனது ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள கேன் வில்லியம்சனின் பதிவில், ”சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த முடிவை எடுப்பது எனக்கு கடினமாக இருந்தது. கடந்த சில காலமாக இது குறித்து நான் எண்ணியது உண்டு. ஆனால், கடந்த சில நாட்களாக இதுதான் சரியான நேரம் என கருதுகிறேன். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு கணமும் பொன்னானது. நியூசிலாந்து கிரிக்கெட்டின் எதிர்காலம் நல்ல கைகளில் இருக்கிறது என்று நான் முழுமையாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் பி.வி.சிந்து
துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளரான ஜஸ்பால் ராணா காலமானார்
37 ஆண்டு சாதனையை உடைக்கவிருக்கும் ரோகித் சர்மா.. இன்றைய ODI போட்டியில் புதிய மைல்கல்!