February 24, 2026

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை 4-வது நாளாக ரத்தானதால் பயணிகள் அவதி

புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள். | படம்: எம்.முத்துகணேஷ் |

புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள். | படம்: எம்.முத்துகணேஷ் |

சென்னை: எழும்​பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி​யின் ஒரு பகு​தி​யாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்​பால அடித்​தளப் பணி​கள் நடை​பெறுகின்​றன.

இதனால், கடற்கரை – செங்​கல்​பட்டு தடத்​தில் பிப்​.20-ம் தேதி முதல் ஏப்​.5-ம் தேதி வரை 44 மின்​சார ரயில்​களின் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், இம்​மார்க்​கத்​தில் இதர மின்​சார ரயில் சேவை​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன.

கடற்கரையில் இருந்து தாம்​பரம், செங்​கல்​பட்டு நோக்கி இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள், எழும்​பூர் ரயில் நிலைய 5-வது நடைமேடை வழி​யாக​வும்,செங்​கல்​பட்​டு, தாம்​பரத்​தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்​படும் மின்​சார ரயில்​கள் எழும்​பூர் ரயில் நிலைய 6-வது நடைமேடை வழி​யாக​வும் இயக்​கப்​படு​கின்​றன.

இவ்​வாறு நடைமேடைகள் மாற்​றப்​பட்​ட​தால், தண்​ட​வாளங்​களைப் கடப்​பது மற்​றும் சிக்​னல் கிடைப்​ப​தில் தாமதம் ஏற்​படு​கிறது. இரு​மார்க்கத்​தி​லும் மின்​சாரரயில்​கள் தாமத​மாகின்​றன. இதன் காரண​மாக, ரயில் நிலை​யங்​களி​லும், ரயில்​களி​லும் பயணி​கள் 45 நிமிடங்​கள் வரை காத்​திருக்​கின்​றனர்.

கடந்த 3 நாட்​களாகவே பயணி​கள் சிரமப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று 4-வது நாளாக தாமதத்​தால் ரயில் பயணி​கள் அவதிப்​பட்​டனர். காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, பொத்​தேரி, காட்​டாங்​குளத்​தூர், கூடு​வாஞ்​சேரி உள்பட பல்​வேறு இடங்​களில் இருந்து நேற்று காலை சென்​னைக்கு வந்த பயணி​கள் மிகுந்த சிரமத்தை சந்​தித்​தனர்.

இது குறித்​து, பயணி​கள் சிலர் கூறிய​தாவது: பொத்​தேரி நிலை​யத்​தில் இருந்து கடற்கரை நோக்கி செல்​லும் மின்​சார ரயி​லில் இன்று (நேற்​று) காலை தாம்​பரம் நிலை​யம் வந்​த​பிறகு, எந்​த​வித முன்​னறி​விப்​பின்றி திடீரென நிறுத்​தப்​பட்​டது.

இதையடுத்​து, வேறு ரயிலுக்​காக கொஞ்​சம் நேரம் காத்​திருந்​த​போது, செங்​கல்​பட்​டில் இருந்து கடற்கரை நோக்கி செல்​லும் மின்​சார ரயில் வந்​தது. அந்த ரயி​லில் கட்​டுக்​கடங்​காதகூட்​டம் நிரம்பி வழிந்​தது. வேலைக்கு உரிய நேரத்​தில் செல்​ல​வேண்​டும் என்ற நிலை​யில், அந்த ரயி​லில் நெரிசலுடன் பயணித்​தோம்.

இந்த ரயில் சேத்​துப்​பட்டு வந்த பிறகு, 25 நிமிடம் நிறுத்​தப்​பட்​டது. பொத்​தேரி​யில் இருந்து எழும்​பூருக்கு வந்​தடைய 2 மணி நேரம்வரை ஆகி​விட்​டது. மின்​சார ரயில்ஆங்​காங்கே நிறுத்​தப்​படு​வதை தவிர்க்க வேண்​டும். மேலும், பரங்​கிமலை – காட்​டாங்​குளத்​தூர் இடையே கூடு​தல் மின்​சார ரயில் சேவை இயக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: பயணி​கள் சிரமத்தை தவிர்க்க, பரங்​கிமலை – கூடு​வாஞ்​சேரி இடையே கூடு​தல் மின்​சார ரயில் சேவை இயக்க ஆலோ​சிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, சோதனை அடிப்​படை​யில் கூடு​தல் ரயில் சேவை இயக்​கப்​பட்​டது.

புறநகரில் இருந்து இந்த ரயி​லில் வரும் மக்​கள் பரங்​கி மலை​யில் இறங்​கி, அரு​கில் உள்ள மெட்ரோ ரயில் நிலை​யம் சென்​று, அங்​கிருந்து மெட்ரோ ரயில் மூல​மாக சென்ட்​ரல், எழும்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களுக்கு செல்ல முடி​யும். இதன்​மூலம், கால​தாமதத்​தை தவிர்க்​க முடி​யும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Spread the love